மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக பிறந்த 5 புலிக்குட்டிகள்..!


மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக பிறந்த 5 புலிக்குட்டிகள்..!
x
தினத்தந்தி 1 Feb 2023 12:58 AM GMT (Updated: 1 Feb 2023 1:31 AM GMT)

மத்திய பிரதேச சரணாலயத்தில் புதிதாக 5 புலிக்குட்டிகள் பிறந்துள்ளன.

மண்ட்லா,

மத்திய பிரதேச மாநிலத்தில் கன்ஹா தேசிய புலிகள் சரணாலயம் உள்ளது. இங்கு டிஜே என்னும் 9 வயது பெண் புலி சமீபத்தில் 5 குட்டிகளை ஈன்றது. தற்போது அவை ஆரோக்கியத்துடன் பூங்காவை சுற்றி நடமாடி வருகின்றன. இதனை ஆர்வமுடன் காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் பூங்காவுக்கு வருகிறார்கள்.

மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை கணக்கெடுப்பின்படி 526 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயரலாம் என தெரிகிறது.


Next Story