கல்லூரி மாணவர் அடித்து கொலை


கல்லூரி மாணவர் அடித்து கொலை
x

செல்லகெரேயில் கல்லூரி மாணவர் அடித்து கொலை செய்யப்பட்டார். அவர், ரெயில் தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிக்கமகளூரு:-

ரெயில் தண்டவாளத்தில்...

சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே டவுன் அபிஷேக்நகர் பகுதியில் ெரயில்வே தண்டவாளம் அருகே நேற்று மர்மமான முறையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் இதுகுறித்து செல்லகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அவரது முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்தன. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நேரலகுண்டே கிராமத்தை சேர்ந்த காட்டப்பா என்பவருடைய மகன் சஷாங் (வயது 18) என்பதும், இவர் அதேப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்்துள்ளது.

சஷாங்கின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாரோ மர்மநபர்கள் அடித்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் அவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சஷாங்கின் உறவினர்கள், நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக செல்லகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story