குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை


குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
x

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக பண்ருட்டியை சேர்ந்த வி.மார்க்ஸ் ரவீந்திரன் சார்பில், வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு தவறிவிட்டது.

எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அல்லது ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். மேலும், இந்த சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு இன்று விசாரிக்கிறது.


Next Story