குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு - 56.88% வாக்குப்பதிவு


குஜராத் முதற் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு  - 56.88% வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 1 Dec 2022 12:21 AM GMT (Updated: 1 Dec 2022 1:59 PM GMT)

குஜராத்தில் அமைதியான முறையில் முதற் கட்ட வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றது.

ஆமதாபாத்,

பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில், 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்தநிலையில், காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. குளிரையும் பொருட்படுத்தாமல் காலை முதலே மக்கள் ஆர்வமாக வந்து தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றினர்.

குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 19 மாவட்டங்களில் இன்று தேர்ந்தல் நடந்த நிலையில் அதிகபட்சமாக தபி மாவட்டத்தில் 72.32% வாக்குகள் பதிவாகி உள்ளன.



Live Updates

  • 1 Dec 2022 3:53 AM GMT

    குஜராத்தில் இன்று 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி  இன்று மாலை பேரணியாக செல்கிறார். மாலை தொடங்கும் இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெறுகிறது. இதில் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்கமாகவே பயணிக்கிறார்.

  • 1 Dec 2022 2:59 AM GMT

    குஜராத் சட்டமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். அந்த வகையில், குஜராத்தின் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா ராஜ்கோட்டில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

  • வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி
    1 Dec 2022 2:46 AM GMT

    வாக்காளர்கள் புதிய சாதனை படைக்க வேண்டும்: பிரதமர் மோடி

    குஜராத்தில் முதல் கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில், வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து புதிய சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில், அதிக வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்த வேண்டும். முதல் தடவையாக வாக்களிக்க உள்ள இளம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த வேண்டும்' என்றார்.

  • 1 Dec 2022 2:35 AM GMT

    இன்று நடைபெற்று வரும் தேர்தலில் இரண்டு கோடி வாக்காளர்கள்,  89 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க உள்ளனர். தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Next Story