ஆன்லைன் மருத்துவ ஆலோசனையில் அரசு பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது


ஆன்லைன் மருத்துவ ஆலோசனையில் அரசு பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது
x

ஆன்லைன் மருத்துவ ஆலோசனையில் அரசு பெண் டாக்டர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் சுகாதாரத்துறை சார்பில் 'இ சஞ்சீவினி' என்ற ஆன்லைன் மருத்துவ பரிசோதனை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு ஆன்லைனில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் பத்தனம்திட்டை மாவட்டம் கோன்னி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த ஒரு பெண் டாக்டர் வழக்கம் போல் ஆன்லைன் மருத்துவ ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவர் நோயாளிகளுக்கு ஆன்லைனில் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஆன்லைனில் வந்த திருச்சூரை சேர்ந்த முகம்மது சுகைப் (வயது 21) என்ற வாலிபர் திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாண போஸ் கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் டாக்டர் உடனடியாக அவரது ஆன்லைன் இணைப்பை துண்டித்தார்.

பின்னர் இதுகுறித்து அந்த பெண் டாக்டர் சைபர் கிரைம் மற்றும் ஆரன்முளா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகம்மது சுகைப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story