நாயர் மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


நாயர் மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

நாயர் மருத்துவ கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மும்பை பைகுல்லா அருகே அக்ரிபாடா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஸ்ரேயாசி பட்கர்(வயது24). நாயர் மருத்துவ கல்லூரியில் மாணவியாக பயின்று வந்தார். கடந்த 22-ந்தேதி மதியம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி தூக்குப்போட்டு தொங்கினார். அவரது பெற்றோர் வீடு திரும்பிய போது மாணவி தூக்குபோட்டது தெரியவந்தது. உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் ஏற்கனவே அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story