கல்வாவில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது


கல்வாவில் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2022 7:45 AM GMT (Updated: 25 Sep 2022 7:46 AM GMT)

தானே,

தானே மாவட்டம் கல்வா இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் அனில் லோக்கண்டே (வயது 28). இவரது மனைவி மீனா (25). நேற்று முன்தினம் தம்பதி இடையே சிறு பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அனில் லோக்கண்டே மனைவி மீனாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இது பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அனில் லோக்கண்டேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story