ஒரே நாளில் 13,427 பேர் கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 13,427 பேர் கொரோனா தடுப்பூசி
x

கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 13,427 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கரூர்

கொரோனா தடுப்பூசி முகாம்

கரூா் மாவட்டத்தில் ெகாேரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி முகாம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று கரூர் பசுபதிஸ்வரா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு இடங்களில் 38-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

நொய்யல்

நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, சேமங்கி அரசு ஆரம்பப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.இந்த முகாம்களில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அனிதா தலைமையில் சுகாதார குழுவினர் கலந்து கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டனர். இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் முகாம்களில் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

13,427 பேர்

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 1,367 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடந்தது.முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 3,609 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,789 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 8,029 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 427 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.


Next Story