வியாபாரியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது


வியாபாரியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது
x

வியாபாரியை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மேல 3-ம் வீதியை சேர்ந்தவர் நஜிமுதீன் (வயது 45). இவர் செருப்பு கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ராணியார் அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்ற போது அவரை 2 பேர் அரிவாளால் தலையில் வெட்டி விட்டு தப்பியோடினர். இதில் ஒருவரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். மற்றொருவர் தப்பியோடினார். பலத்த காயமடைந்த நஜிமுதீன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவரை அரிவாளால் வெட்டிய கருப்பசாமி (24), கலியமூர்த்தி (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேர் நஜிமுதீனிடம் செல்போன் பறிக்க முயன்று தகராறில் ஈடுபட்டு அவரை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story