சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x

நாட்டறம்பள்ளி அருகே சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர், சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கேத்தாண்டப்பட்டி அருகே கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்த தமிழரசன் மகன் பரத் (வயது 23), சங்கர் மகன் வல்லரசு (20) ஆகிய இருவரும் தங்களது வீட்டின் பின்புறம் தலா 45 பாக்கெட் கள்ளச்சாராயம் மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 90 கள்ளச்சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.


Next Story