3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மகாதேவன் (வயது 26), திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்த பிரவீன் (25), மேலப்பாட்டத்ைத சேர்ந்த சிவா என்ற குட்ட சிவா (23). இவர்கள் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் மேலப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஏற்று மகாதேவன், பிரவீன், சிவா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.


Next Story