மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை


மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த தொழிலாளிக்கு 3 ஆண்டு சிறை
x
சேலம்

சேலம் இரும்பாலை அருகே கீரைப்பாப்பம்பாடி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), தறித்தொழிலாளி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாத்ரூமில் 9-ம் வகுப்பு மாணவி குளிப்பதை எட்டி பார்த்துள்ளார். இதுதொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மாணவி குளிப்பதை எட்டிப்பார்த்த சரவணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.


Next Story