ஆவடி அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் 43 பவுன் நகை திருட்டு


ஆவடி அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் 43 பவுன் நகை திருட்டு
x

ஆவடி அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் 43 பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

ஆவடி அடுத்த கோவில்பதாகை அசோக் நகர் குப்பம்மாள் தெருவைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர், ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கனரக வாகன தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர், வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய மனைவி கோமதி மற்றும் 2 மகன்களுடன் நேற்று முன்தினம் இரவு சென்னை மூலக்கடை பகுதியில் வசிக்கும் தனது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சிவக்குமார் நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்து இருந்த 43 பவுன் நகை மற்றும் ரூ.55 ஆயிரத்தை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story