இந்து முன்னணியினர் 75 பேர் கைது


இந்து முன்னணியினர் 75 பேர் கைது
x

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 75 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 75 பேரை ேபாலீசார் கைது செய்தனர்.

வாக்குவாதம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நகைக்கடை பஜார் வழியாக செல்லும் போது மேளதாளம் அடித்து செல்லக்கூடாது அமைதியாக செல்ல வேண்டுமென விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஏற்பாட்டாளர்களிடம் போலீசார் கூறினர். இதனை ஏற்க மறுத்து போலீசார் உடன் பேரணியில் வந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஊர்வலம் அமைதியாக சென்றது. இந்நிலையில் நகை கடை பஜார் வழியாக மேளதாளம் அடித்து செல்ல அனுமதி கொடுக்காத போலீசாரை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினர்.

75 பேர் கைது

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி கட்சியினர் திடீரென ராமகிருஷ்ணாபுரம் பைபாஸ் சாலை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பொன்னையா உள்பட 75 பேரை நகர் போலீசார் கைது செய்தனர். முன்னதாக அப்பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், துணைபோலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோரின் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story