ஊத்துக்கோட்டை அருகே ரூ.1 கோடி தாமிர கம்பிகள் திருடிய வழக்கில் மேலும் 9 பேர் கைது


ஊத்துக்கோட்டை அருகே ரூ.1 கோடி தாமிர கம்பிகள் திருடிய வழக்கில் மேலும் 9 பேர் கைது
x

ஊத்துக்கோட்டை அருகே மின்சார வாரியத்துக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள தாமிர கம்பிகள் திருடிய வழக்கில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்

தாமிர கம்பிகள் திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்க உள்ளனர். இதற்காக மின்சாதன பொருட்கள் அங்கு குவிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி 2 டன் எடையுள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள தாமிரகம்பிகள் திருடப்பட்டதாக மின்வாரிய பொறியாளர் கிருஷ்ணகுமார் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவை சிறந்த ராவ்பகதூர், லோகநாதன், செல்வராஜ் ஆகிய போலீசாருடன் கூடிய சிறப்பு படை அமைக்கப்பட்டது.

மேலும் 9 பேர் சிக்கினர்

இந்த போலீசார் விசாரணை நடத்தி சில நாட்களுக்கு முன் அரக்கோணம் பஜார் தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி (வயது 42), பெரியசாமி (42) ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அரக்கோணம் காவனூர் காலனி பெரிய தெருவை சேர்ந்த சசி (43), வினோத்குமார் (32), சாம் ஜெபதுரை (32) வின்சன்ட் பிரைட் (34), செய்யூர் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (25), சின்னத் தெருவை சேர்ந்த திருமலை (25), மோகன் (21) உள்பட 9 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களை ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.


Next Story