சரக்கு வாகனம் மோதி 2 வயது குழந்தை பலி


சரக்கு வாகனம் மோதி 2 வயது குழந்தை பலி
x

ரிஷிவந்தியம் அருகே சரக்கு வாகனம் மோதி 2 வயது குழந்தை இறந்தது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

வாகனம் மோதியது

ரிஷிவந்தியம் அடுத்த பல்லவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரமேஷ், விவசாயி. இவரது மகன் ரிஷிதரன் (வயது 2). நேற்று காலை ஜெயராமன் தனது பேரன் ரிஷிதரனுடன் அதே பகுதியில் உள்ள பல்லவாடி பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது எலவனாசூர்கோட்டையில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக குழந்தை ரிஷிதரன் மீது மோதியது.

குழந்தை பலி

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தையை ஜெயராமன் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், ரிஷிதரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சரக்கு வாகனத்தின் டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டம், மேட்டுப்புலியூரை சேர்ந்த சேகர் மகன் சத்தியபாரதி என்பவர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரக்கு வாகனம் மோதி தாத்தா கண் முன்னே பேரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story