தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி; ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலி; ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x

தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலியாக நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

திருநெல்வேலி

தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு எதிரொலியாக நெல்லை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

பெட்ரோல் குண்டுவீச்சு

கோவையை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பா.ஜனதா பிரமுகர்கள் வீடு, வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்காக தமிழகம் ழுமுவதும் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகர போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வரும் பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல்களை தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறார்கள். ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விடிய விடிய சோதனை

மேலும் பெட்ரோல் குண்டு வீச்சை தடுக்கும் வகையில் நெல்லை மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போலீசார் விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை மாநகரில் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், டவுன் பகுதி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாகனங்களில் சந்தேகப்படும்படியாக வருபவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story