சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு..!


சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு..!
x

சென்னையில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் 14 லட்சம் லிட்டர் ஆவின்பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மாதவரம் மத்தியபால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் விநியோகமும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை சோழிங்கநல்லூர், காக்களூர் பண்ணைகளில் 3-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. 6 மணி நிலவரப்படி பால் பாக்கெட்டுகள் ஏற்றப்படாமல் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களுக்கு பால் சரியான நேரத்தில் செல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பால் வரத்து குறைவு, ஒப்பந்த தொழிலாளர்கள் வருகை குறைவு உள்ளிட்ட காரணமாக பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுகிறது.


Next Story