தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு


தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு
x

தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

திருவாரூர்

காந்தியடிகளின் நினைவு நாள் தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பள்ளிகளிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி கொரடாச்சேரி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. வெண்ணவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமையில் மாணவ, மாணவிகள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதேபோல் கொண்டையானிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமையிலும், தீபங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமையிலும், திருப்பள்ளிமுக்கூடல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் கோமதி தலைமையிலும், பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வீரமணி தலைமையிலும், பூங்காவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமையிலும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


Next Story