லாரி மோதி மொபட்டில் சென்ற முதியவர் பலி


லாரி மோதி மொபட்டில் சென்ற முதியவர் பலி
x
சேலம்

சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 75). இவர் நேற்று மாலை கருப்பூர் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நண்பர் ஒருவருடைய வீட்டின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மொபட்டில் புறப்பட்டார். சேலம் மத்திய சிறை அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி அவரது மொபட் மீது மோதியது.

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் அருளானந்தம் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அருளானந்தம் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story