புகையிலை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம்


புகையிலை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நேற்று உறுதிமொழி எடுப்பு, கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, புகையிலை எதிர்ப்பு தின உறுதி மொழியை எடுத்தார். அதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் மாஸ் பாராமெடிக்கல் கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கம், விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பேரணியானது மதுரை- தென்காசி மெயின் ரோடு வழியாக தென்காசி புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க தென்காசி மாவட்ட துணை குழு தலைவர் மாஸ் அன்சாரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் நெல்லை கேன்சர் கேர் சென்டர் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story