பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர் கைது


பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர் கைது
x

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் (வயது 50), விவசாயி. இவர், கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே பகுதியில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகள் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து ஆரணி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பின் போது வெங்கடேசன் (வயது 45) என்பவர் மட்டும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து வெங்கடேசனை ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் கைது செய்து ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து வெங்கடேசனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story