மதுபானம் கடத்திய 3 பேர் கைது


மதுபானம் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

அஞ்செட்டியில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டியில் இருந்து தக்கட்டி செல்லும் சாலையில் ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் கர்நாடக மதுபானங்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கார் டிரைவர் மற்றும் உடன் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கார் டிரைவர் சீங்கோட்டையை சேர்ந்த பார்கேஷ் (வயது 19) என்பதும், உடன் வந்தவர்கள் அதேபகுதியை சேர்ந்த முனுசாமி (36), குமார் (32) ஆகியோர் என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் 370 மதுபானங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story