வாடிப்பட்டி அருகே நகைக்கு பாலிஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் - மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் துணிகரம்


வாடிப்பட்டி அருகே நகைக்கு பாலிஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகை அபேஸ் - மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் துணிகரம்
x

வாடிப்பட்டி அருகே நகையை பாலிஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் அபேஸ் செய்தனர்.

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி அருகே நகையை பாலிஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் அபேஸ் செய்தனர்.

நகைக்கு பாலிஷ்...

வாடிப்பட்டி அருகே கூழாண்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி அன்னமயில் (வயது 70).இவர் தனது மகன் வீரமணியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு வீட்டில் முன்பு அன்னமயிலும் அவரது உறவினர் கருப்பாயி என்பவர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது 40 வயது மதிக்கத்தக்க 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் ஒருவன் பாட்டி உங்கள் கழுத்தில் உள்ள தங்கச்சங்கிலி அழுக்கேறி பழையதாக உள்ளது. அதை உடனே சுத்தம் செய்து இங்கே கொடுத்து விடுகிறோம். கொடுங்கள் என்று கேட்டனர்.

5 பவுன் நகை அபேஸ்

உடனே அன்னமயில் அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தார். அவர்கள் அதை சுத்தம் செய்வதுபோல் பாசாங்கு செய்து விட்டு அவர்கள் கொண்டு வந்திருந்த கவரிங் நகையை சுத்தம் செய்தது போல் மினுமினுப்பதை அவரிடம் காண்பித்து கொடுத்துவிட்டு சென்றனர். அதன்பின் அதை உற்றுப் பார்த்த பின் தான் அது கவரிங் நகை என்று தெரியவந்தது.

இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்ய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் மூதாட்டியிடம் தங்க நகையை ஏமாற்றி எடுத்துச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story