தம்பியை வெட்டிய அண்ணனுக்கு வலைவீச்சு


தம்பியை வெட்டிய அண்ணனுக்கு வலைவீச்சு
x

ஏர்வாடி அருகே தம்பியை வெட்டிய அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகன் இசக்கியப்பன் (வயது 39). விவசாயி. இவருக்கும், இவரது அண்ணன் முருகனுக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், இசக்கியப்பனை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த இசக்கியப்பன் சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை தேடி வருகின்றனர்.


Next Story