ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது


ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு  டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Sep 2022 9:55 PM GMT (Updated: 25 Sep 2022 10:04 PM GMT)

ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகரின் பர்னிச்சர் கடைக்கு டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடைக்கு தீ வைப்பு

ஈரோடு மூலப்பாளையம் டெலிபோன்நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பா.ஜ.க. இளைஞர் அணி மாவட்ட முன்னாள் செயலாளர் தட்சிணாமூர்த்தி (வயது 51) என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்ளது. கடந்த 22-ந் தேதி நள்ளிரவில் மர்மநபர்கள் அந்த பர்னிச்சர் கடைக்கு தீ வைக்க முயன்றனர். அவர்கள் கடையின் ஜன்னல் வழியாக 2 பாக்கெட்டுகளில் டீசலை உள்ளே போட்டு உள்ளனர். பிறகு ஒரு துணியில் தீ வைத்துவிட்டு அந்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர்.

இதில் ஜன்னலின் சில பகுதிகளிலும், கடையில் உள்ளே இருந்த மேஜையும் லேசாக தீப்பற்றி அணைந்தது. இதனால் கடையில் இருந்த மற்ற பொருட்கள் எரியாமல் தப்பியது.

வலைவீச்சு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி, ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும், பர்னிச்சர் கடைக்கு தீ வைக்க முயன்ற சம்பவத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைக்கு தீ வைக்க முயன்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

4 பேர் கைது

விசாரணையில் ஈரோடு கருங்கல்பாளையம் ஜெகன் வீதியை சேர்ந்த முகமது ரபீக்கின் மகன் சதாம்உசேன் (25), ஈரோடு பி.பி.அக்ரஹாரம் கைக்கோளர் வீதியை சேர்ந்த முகமது இலியாசின் மகன் கலில் ரகுமான் (27), ஈரோடு இந்திராநகரை சேர்ந்த அமானுல்லாவின் மகன் ஜாபர் சாதிக் (27), இவரது தம்பி ஆசிக் அலி (23) ஆகியோர் கடைக்கு தீ வைக்க முயன்றதும், அதில் சதாம் உசேன் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகி என்பதும் மற்ற 3 பேரும் அவருடைய நண்பர்கள் என்பதும் தெரியவந்ததுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தார்கள்.


Related Tags :
Next Story