வக்கீலை தாக்கிய தம்பி கைது


வக்கீலை தாக்கிய தம்பி கைது
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

திண்டிவனத்தில் வக்கீலை தாக்கிய தம்பி கைது

விழுப்புரம்

திண்டிவனம்

திண்டிவனம் முருங்கப்பாக்கம் அய்யாசாமி தெருவை சேர்ந்தவர் ஜவகர்(வயது 52). வக்கீலான இவர் வீ்ட்டின் மாடியிலும், அவரது தம்பி ரகுபதி(48) கீழ் தளத்திலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில் இருவருக்கும் பொதுவான கிணற்றில் உள்ள மின் மோட்டாருக்கான பியூஸ் கேரியரை ரகுபதி பிடுங்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை ஜவகர் தட்டிக்கேட்டபோது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரகுபதி, ஜவகரை திட்டி தாக்கி வீட்டின் மாடிப்படியில் இருந்து அவரை கீழே தள்ளி விட்டார். அப்போது அருகில் இருந்த கைப்பிடி சுவர் உடைந்து விழுந்ததில் காயம் அடைந்த ஜவகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுபதியை கைது செய்தனர்.



Next Story