கருக்கல்வாடியில் எருதாட்டம் 250 காளைகள் பங்கேற்பு


கருக்கல்வாடியில் எருதாட்டம் 250 காளைகள் பங்கேற்பு
x

கருக்கல்வாடியில் எருதாட்டம் நடைபெற்றது. இதில் 250 காளைகள் களம் இறக்கப்பட்டன.

சேலம்

தாரமங்கலம்,

எருதாட்டம்

தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கல்வாடியில் பிரசித்தி பெற்ற பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் மாலை 3 மணிக்கு ேகாவில் மாடு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கருக்கல்வாடி, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, இளம்பிள்ளை, அமரகுந்தி, முனியம்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக களம் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பொதுமக்கள் கண்டு ரசித்தனர்

இந்த காளைகள் 3 முறை கோவிலை வலம் வர செய்து களத்தில் இறக்கி விடப்பட்டன. அந்த மாடுகள் முன்பு துணியால் செய்த பொம்மைகளை காண்பித்து இளைஞர்கள் விளையாட்டு காட்டினர்.

இந்த எருதாட்டத்தை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.


Next Story