மதுபோதைக்கு எதிரான பிரசார பேரணி


மதுபோதைக்கு எதிரான பிரசார பேரணி
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுபோதைக்கு எதிரான பிரசார பேரணி நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மே தின அணிவகுப்பு மற்றும் மதுபோதைக்கு எதிரான பிரசார பேரணி நடந்தது. பேரணிக்கு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜமோகன், நெப்பத்தூர் ராஜ்குமார், சீசர், பாரதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை காவேரி நகரில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. பேரணியில் பள்ளி, கல்லூரிகளில் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்த வேண்டும். நிரந்தரமாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும். தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களை முறையாக நடைமுறைபடுத்த வேண்டும். கஞ்சாவை ஒழித்து மாணவர் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும். மது இல்லாத நாட்டை வழிநடத்த வேண்டும் போன்ற போதைக்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோரிக்கை பதாகைகளை கைகளில் ஏந்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டவாறு சென்றனர். இந்த பேரணி பூக்கடை தெரு கூறைநாடு காமராஜர் சாலை வழியாக சின்னகடைவீதியில் முடிவடைந்து.


Next Story