செல்போன் செயலி மூலம் உணவின் தரம் குறித்து புகார் தெரிவிக்கலாம்


செல்போன் செயலி மூலம் உணவின் தரம் குறித்து புகார் தெரிவிக்கலாம்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்ட பொது மக்களுக்கு தரமான பாதுகாப்பான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதில் தெரிந்து கொள்வதற்காக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை தெரிவிக்க 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண் செயல்படுத்தப்படுகிறது. உணவு புகார்களை unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதை மேம்படுத்தும் விதமாக தற்போது என்ற TN food safety consumer என்ற செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி புகார் விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் ஸ்கிரீன் ரீடர் அணுக்கள் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயின் மறு பயன்பாடு உணவு செரிவூட்டல் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக குறும்படங்கள் தயாரிக்கப்பட்டு சமூக வலைதளம் மூலமாக வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையால் உருவாக்கப்பட்ட இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்க்கும் சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story