பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்


பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்
x

மகாளய அமாவாசையையொட்டி பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி பிரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் போடப்பட்டது. பின்னர் ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றை யாகத்தில் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து கரும்பு, தேங்காய், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட பழங்களையும், சேலைகளையும் பக்தர்கள் யாகத்தில் போட்டனர். அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story