கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு


கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

விமானப்படை தேர்வில் கலந்துகொள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர்களுக்கு கலெக்டர் அழைப்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய விமானப் படையின் தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஏர்மேன் மெடிக்கல் உதவியாளர் பதவி தேர்வுக்கான முகாம் இன்று(புதன்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் பிளஸ்-2 அறிவியல் பாடம் படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேலும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். திருமணமாகாத இளைஞர்கள் 27-06-1999 முதல் 27.06.2004-ந் தேதிக்குள்ளும், திருமணமான இளைஞர்கள் 27-06-1999 முதல் 27-06-2022-ந் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 152.5 செ.மீ உயரம் இருக்க வேண்டும். தகுதியுடைய இளைஞர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தையோ அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story