புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

புகார் பெட்டி

தென்காசி

மோசமான நிலையில் டிரான்ஸ்பார்மர்

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே தாயார்தோப்பு கிராமத்தில் பள்ளியின் பக்கத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதை சரிசெய்ய வேண்டுகிறேன்.

-ரமேஷ் நாராயணன், வீரகேரளம்புதூர்.

பஸ்நிலையம் வராத பஸ்கள்

பாபநாசத்தில் இருந்து தென்காசி வழியாக மதுரை, குமுளி, ராஜபாளையத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் கடையம் பஸ்நிலையம் உள்ளே வருவதில்லை. மெயின் ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் பஸ்நிலையத்தில் காத்து கிடந்து ஏமாற்றம் அடைகிறார்கள். எனவே அந்த பஸ்கள் பஸ்நிலையம் உள்ளே வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருக்குமரன், கடையம்.

கொடிகள் படர்ந்த மின்கம்பம்

செங்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கட்டிடத்திற்கு வடபுறமுள்ள மின்கம்பத்திலும், மின்கம்பியிலும் செடி, கொடிகள் படர்ந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

-நம்பிராஜன், செங்கோட்டை.

தினமும் குடிநீர் வழங்கப்படுமா?

மேலாம்பூர் அருகே கருத்தப்பிள்ளையூரில் கடனா ஆறு ஓடுகிறது. இந்த கிராமத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

குப்பைகளால் சுகாதாரக்கேடு

பாவூர்சத்திரத்தில் பஸ் நிலையம் அருகே நெல்லை- தென்காசி ரோட்டில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. அந்த பகுதியில் மூட்டை மூட்டையாக குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு நிலவுகிறது.. எனவே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-சுப்ரமணியன், பாவூர்சத்திரம்.


Next Story