அரியலூரில் ஒரேநாளில் 15,183 பேருக்கு கொரோனா தடுப்பூசி


அரியலூரில் ஒரேநாளில் 15,183  பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

அரியலூரில் ஒரேநாளில் 15,183 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அரியலூர்

தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 38-வது சிறப்பு முகாம்களை நேற்று நடத்தியது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 15,183 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.


Next Story