ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

பாவூர்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரத்தில் சி.பி.ஐ. எம்.எல். கட்சி சார்பில் குடிநீர், சாலைவசதி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் அய்யப்பன் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைமை குழு உறுப்பினர் வேல்முருகன், மாவட்ட குழு உறுப்பினர் மாதவன், அறிஞர், திருமுருகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.மாடசாமி, செ.மாதவன், எம்.வேலு, பேச்சிமுத்து மற்றும் பீடி சங்கத் தலைவர் அய்யம்பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மார்க்சிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினர் மாரியப்பன் நன்றி கூறினார்.


Next Story