தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி குண்டாற்று பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதோடு கழிவு நீரும் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது. குண்டாற்று பகுதியில் சுகாதார சீர் கேட்டினை தவிர்க்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த நிழற்குடை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் படந்தால் விலக்கில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்குடையை விரைவாக சீரமைக்க வேண்டும்.

பூங்கா சீரமைக்கப்படுமா?

விருதுநகர் பட்டேல் ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்படிருந்ததற்கு சாட்சியாக நடைபாதை மட்டுமே உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இங்கு புதியதாக சிறுவர் விளையாட்டு உபகரணங்களை அமைத்து பூங்காவை சீரமைக்க வேண்டும்.

கூடுதல் பஸ் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்திற்கு இடையூறு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே சிலர் வாகனங்களை நிறுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story