வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், புன்னம்சத்திரம், நடைனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர். மரவள்ளிக்கிழங்கை சவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதேபோல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் டன் ஒன்று ரூ.16ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்று ரூ.13 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது.


Next Story