வாகனம் மோதி ெகாத்தனார் சாவு


வாகனம் மோதி ெகாத்தனார் சாவு
x

மதுரையில் வாகனம் மோதி ெகாத்தனார் இறந்தார்.

மதுரை

புதூர்,

மதுரை புதூர் பரசுராமன்பட்டி கம்பன் நகரை சேர்ந்தவர் கோட்டை மனோகரன் (வயது 60). கொத்தனார். சம்பவத்தன்று இவர் மூன்றுமாவடியில் இருந்து அழகர்கோவில் மெயின் ரோட்டில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மனோகரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதூர் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story