மின்சாரம் தாக்கி விவசாயி பலி


மின்சாரம் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி அருகே உள்ள குறிஞ்சான் குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36). விவசாயி. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டில் மின் வேலை பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அறிந்த பார்த்திபனூர் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உயர் மின் அழுத்தத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் மின்வாரியத்திற்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால்தான் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது என கூறி இறந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து உள்ளனர். இதையடுத்து பரமக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி, தாசில்தார் ரவி ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Next Story