15 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா


15 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா
x

15 ஆண்டுகளுக்கு பின் மீன்பிடி திருவிழா நடந்தது.

திருச்சி

மணப்பாறை:

மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டியில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் கள்ளிக்குளம் உள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையின்போது நீர் முழுவதுமாக நிறைந்திருந்த நிலையில், அதில் அதிக அளவில் மீன்கள் காணப்பட்டன. இந்நிலையில் தற்போது நீரின் அளவு குறைந்து விட்டதால் கிராம மக்கள் சார்பில் மீன்களை பிடித்துக் கொள்ளும் வகையில், இக்குளத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

அதன்படி நேற்று ஊர் முக்கியஸ்தர்கள் விழாவை தொடங்கி வைத்ததையடுத்து, மக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்பிடி வலைகளுடன் குளத்தில் இறங்கி மீன் பிடிக்கத் தொடங்கினர். இதில் கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி போன்ற மீன்கள் அவர்களுக்கு சிக்கியது. அனைவருக்கும் மீன்கள் சிக்கியதால் மீன்பிடி ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதில் சிலருக்கு சுமார் 2 கிலோவில் இருந்து 5 கிலோ எடையுள்ள பெரிய மீன்கள் அதிகளவில் சிக்கியது. புரட்டாசி, மகாளய அமாவாசை என்றாலும் கூட நேற்று மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் மீன்களை ஆர்வமுடன் பிடித்து சென்றனர்.


Next Story