ரூ.1.40 கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா


ரூ.1.40 கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

புளியங்குடியில் ரூ.1.40 கோடியில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி

புளியங்குடி:

புளியங்குடி நகராட்சி 1-வது வார்டு ஆவணி அம்மன் கோவில் அருகில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம், 11-வது வார்டில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் இணைப்பு வசதி ஆகிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. புளியங்குடி நகராட்சி தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார். இதில் நகராட்சி துணைத் தலைவர் அந்தோணிசாமி, ஆணையாளர் மா.சுகந்தி, பொறியாளர் முகைதீன், சுகாதார அலுவலர் கணேசன், கவுன்சிலர்கள், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது, பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story