நர்சிடம் தங்க சங்கிலி பறிப்பு


நர்சிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

சுரண்டையில் நர்சிடம் தங்க சங்கிலி பறித்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை ஆலடிப்பட்டியைச் சேர்ந்த ராமநாதன் மனைவி புஷ்பா (வயது 55). இவர் சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சுரண்டை பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் திடீரென்று புஷ்பா கழுத்தில் கிடந்த 55 கிராம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து அவர் சுரண்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story