இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ெரயில் நிலையம் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்துக்களை பற்றியும், இந்து மதத்தை பற்றியும் அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆ.ராசாவை உடனடியாக தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பா.ஜனதா பிரமுகர்களின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தின் போது அவர்கள் ஊர்வலமாக வந்து ஆ.ராசா உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் நின்ற போலீசார், அந்த உருவ பொம்மையை எரிக்க விடாமல் கைப்பற்றினர். போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் முருகானந்தம், தென் மண்டல தலைவர் ராஜபாண்டி, மாவட்ட தலைவர் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story