விஷம் குடித்து கணவர் தற்கொலை


விஷம் குடித்து கணவர் தற்கொலை
x

விஷம் குடித்து கணவர் தற்கொலை

திருவாரூர்

மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையை அடுத்த கோவிந்தநத்தம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 59). இவர் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சாந்தி (53). இவர் கடந்த 1 ஆண்டாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனஉளைச்சலில் இருந்த பாண்டியன் பூச்சிமருந்தை(விஷம்) குடித்தார். இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் இறந்தார். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த பாண்டியனுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.


Next Story