குலசேகரன்பட்டினத்தில் த.மு.மு.க.மற்றும் ம.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வு


குலசேகரன்பட்டினத்தில் த.மு.மு.க.மற்றும் ம.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

குலசேகரன்பட்டினத்தில் த.மு.மு.க.மற்றும் ம.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினத்தில் த.மு.மு.க.மற்றும் ம.ம.க. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஆசாத் தலைமை தாங்கினார். இதில் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர், மாநில துணை பொதுச் செயலாளர் ஜோசப் நோலோஸ்கோ, மாவட்ட துணை செயலாளர் முகமது ரபிக் ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநில செயலாளர் அக்பர்அலி தேர்தலை நடத்தினார். கிளைத் தலைவராக ஹஜ் மொய்தீன் செயலாளராக அராபாத், ம.ம.க.கிளை செயலாளராக சிராஜூதீன், பொருளாளர் ஆகரிஸ்வான் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் நடந்த கூட்டத்தில் குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து தரவேண்டும், குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் உள்ளூர் பொதுமக்கள் கடைசி 4 நாட்கள் இருசக்கர வாகனத்தில் வெளியூரில் வேலைக்கு சென்று ஊருக்கு திரும்ப அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிராஜூதீன் நன்றி கூறினார்.


Next Story