திருச்செந்தூர் கோவிலில்பூஜை நேரங்களில் மீண்டும்சைரன் ஒலிக்க கோரிக்கை


திருச்செந்தூர் கோவிலில்பூஜை நேரங்களில் மீண்டும்சைரன் ஒலிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

திருச்செந்தூர் கோவிலில் பூஜை நேரங்களில் மீண்டும் சைரன் ஒலிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி அருகே சேர்ந்தபூமங்களத்தில் தமிழ்நாடு பாரத திருமுருகன் திருச்சபை மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் மாநில தலைவர் மோகனசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் தங்கத்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் திருச்சபை ஆலோசகர் சங்கரன் பிள்ளை, யோகா மாஸ்டர் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில், திருச்செந்தூர் கோவிலில் முந்தைய காலங்களில் காலை பூஜை நேரங்களில் சைரன் ஒலிக்கும். அப்பொழுது பக்தர்கள் முருகனை மனதில் நினைத்து வணங்குவா். சமீபகாலமாக இந்த முறை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த சைரனை மீண்டும் ஒலிக்க செய்ய வேண்டும். காலை, உச்சகால பூஜை, சாய்ரட்சை பூஜை போன்ற வேலைகளில் இந்த சைரனை ஒலிக்க செய்ய வேண்டும். மேலும் திருச்செந்தூர் கடற்கரையில் நவீன கழிப்பிட வசதியும். பெண்கள் உடை மாற்றும் வசதியும் ஏற்பாடு செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story