ஊர்க்காவல் படைக்கு சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


ஊர்க்காவல் படைக்கு சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 25 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படும். இதற்கான தேர்வு அக்டோபர் மாதம் 6 மற்றும் 7-ந் தேதி நடைபெறும். ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம். தேர்வு நடைபெறும் நாட்களில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவடையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கல்விச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 எடுத்து வர வேண்டும். இந்திய குடியுரிமை பெற்றவராகவும், அரசியல் கட்சி தொடர்பு இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் உடல் தகுதிகள் காவல்துறையை போன்றது. இப்பணிக்கு மாத ஊதியம் எதுவும் இல்லை. பணி நாட்களுக்கு உரிய படித்தொகை மட்டுமே பெற்று தரப்படும். பணிக்கு சேர விருப்பமுள்ளவர்கள் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஊர்க்காவல் படைக்கு 3 ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து வருகை தர வேண்டும். 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும். அரசு பணியில் உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.


Next Story