கண்மாயில் மீன்பிடி திருவிழா


கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

திருமயம் அருகே கொசப்பட்டி கிராமத்தில் கொசகண்மாயில் ஊத்தா குத்துதல் எனப்படும் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் நத்தம், பூலாம்குறிச்சி, பொன்னமராவதி, மணப்பாறை, திண்டுக்கல், ராங்கியம், திருமயம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் ஒரே நேரத்தில் கண்மாய்க்குள் இறங்கி போட்டிப் போட்டுக் கொண்டு ஊத்தாவை வைத்து மீன் பிடித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, விரால், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி ஆகிய மீன்கள் கிடைத்தது. பின்னர் தங்களுக்கு கிடைத்த மீன்களை இளைஞர்கள் ஆர்வமுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். மீன்பிடி திருவிழாவை காண ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர்.


Next Story