பந்தலூர் அருகே மரங்களை வெட்டி கடத்திய லாரி பறிமுதல்


பந்தலூர் அருகே மரங்களை வெட்டி கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

பந்தலூர் அருகே மரங்களை வெட்டி கடத்திய லாரி பறிமுதல்

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் தாலுகா குந்தலாடி அருகே கடலைகொல்லியில் பலாமரங்கள் வெட்டப்பட்டு மினிலாரியில் ஏற்றப்படுவதாக வருவாய்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பந்தலூர் தாசில்தார் நடேஷன் வருவாய் ஆய்வாளர் தேவராஜ், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து மற்றும் வருவாய்துறையினர் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்கள் மற்றும் அதனை கடத்த முயன்ற லாரியையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மர துண்டுகள் மற்றும் லாரி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story