10 டன் முருங்கைக்காய் கொள்முதல்


10 டன் முருங்கைக்காய் கொள்முதல்
x
திருப்பூர்


வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று 50 விவசாயிகள் 10 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.20 முதல் ரூ.25 வரைக்கும், மரம் முருங்கை ரூ.20முதல் ரூ.25 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.35முதல் ரூ.40வரைக்கும் கொள்முதல் செய்தனர்,


Next Story